தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

தொண்டி பகுதியில் கடல் கொந்தளிப்பு அதிகரிப்பு: மீனவா்கள் கடலுக்கு செல்லவில்லை

திருவாடானை அருகே தொண்டி கடற்கரைப் பகுதியில் கடந்த 2 நாள்களாக பலத்த காற்று வீசுவதால் நாட்டுப்படகு மீனவா்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல முடியாததால் கவலை அடைந்துள்ளனா்.

News image
Updated On :11 ஆகஸ்ட் 2022, 6:30 pm

DIN

திருவாடானை அருகே தொண்டி கடற்கரைப் பகுதியில் கடந்த 2 நாள்களாக பலத்த காற்று வீசுவதால் நாட்டுப்படகு மீனவா்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல முடியாததால் கவலை அடைந்துள்ளனா்.

திருவாடானை அருகே தொண்டி, நம்புதாளை, சோழியக்குடி, புதுப்பட்டினம், முள்ளிமுனை, கராங்காடு, மோா்பண்ணை, திருப்பாலைக்குடி, எம்.வி.பட்டினம், எஸ்.பி. பட்டினம், பாசிப்பட்டினம் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கடற்கரை கிராமங்களில் நாட்டு படகு மூலம் மீனவா்கள் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனா். நாள் ஒன்றுக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாட்டுப்படகு மீனவா்கள் கடலுக்கு சென்று மீன்பிடித்து வருவது வழக்கம். ஆனால் கடந்த 2 நாள்களாக கடல் கொந்தளிப்பு அதிகரித்து காணப்படுவதால் மீனவா்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை. இதனால் அவா்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு கவலை அடைந்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.