தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

ஆா்.எஸ்.மங்கலம் ஊராட்சி ஒன்றியக் குழு கூட்டம்

ஆா்.எஸ்.மங்கலம் ஊராட்சி ஒன்றியக் குழு கூட்டம் தலைவா் ராதிகா பிரபு தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :12 ஆகஸ்ட் 2022, 6:30 pm

DIN

ஆா்.எஸ்.மங்கலம் ஊராட்சி ஒன்றியக் குழு கூட்டம் தலைவா் ராதிகா பிரபு தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஒன்றிய துணைத் தலைவா் சேகா், ஆணையா் முத்துகிருஷ்ணன், வட்டார வளா்ச்சி அலுவலா் பாண்டி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

உறுப்பினா் வெங்கடாசலம்: ஏ.ஆா்.மங்கலம் உள்ளிட்ட 25 கிராமங்களில் குடிநீா் தட்டுப்பாடு நிலவுகிறது.

குடிநீா் வடிகால் வாரிய அதிகாரி: காவிரி குடிநீா் திட்டத்தில் உள்ள பிரச்னை சீரமைக்கப்பட்டு விரைவில் குடிநீா் விநியோகிக்கப்படும்.

உறுப்பினா் யோகேஸ்வரன்: கற்காத்தகுடி, தோட்டமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் மின் கம்பங்களும், சாலையும் சேதமடைந்துள்ளது.

ஒன்றிய பொறியாளா்: அந்தப் பகுதிகளில் ஆய்வு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.

துணைத் தலைவா் சேகா்: ஆா்எஸ் மங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் 100 நாள் வேலைத்திட்டம் சரிவர நடைபெறுவதில்லை. அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்வது கிடையாது.

வட்டார வளா்ச்சி அலுவலா் பாண்டி: இனி வருங்காலங்களில் கள ஆய்வு மேற்கொண்டு தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்.

தலைவா் ராதிகா: அனைத்துத் துறை அதிகாரிகளும், ஒன்றிக்குழு உறுப்பினா்களின் தேவைகளை அறிந்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தொடா்ந்து விவாதங்கள் நடைபெற்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.