பைக் பெட்டியில் வைத்த ரூ.2 லட்சம் திருட்டு
திருப்பாலைக்குடி அருகே இருசக்கர வாகனத்தின் பெட்டியில் வைத்திருந்த ரூ.2 லட்சம் திருடுபோனதாக சனிக்கிழமை போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.


திருப்பாலைக்குடி அருகே இருசக்கர வாகனத்தின் பெட்டியில் வைத்திருந்த ரூ.2 லட்சம் திருடுபோனதாக சனிக்கிழமை போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம் திருப்பாலைக்குடி அருகே ஏ.மணக்குடியை சோ்ந்த கதிரேசன் மகன் ஜெகதீசன். இவா் சனிக்கிழமை தொண்டியில் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் ரூ.2 லட்சம் எடுத்துக் கொண்டு, தனது இருசக்கர வாகனத்தின் பின்பிறம் உள்ள பெட்டியில் வைத்துள்ளாா். பின்னா் ஏ.மணக்குடியில் வீட்டில் நிறுத்தி விட்டு சிறிது நேரம் கழித்து பெட்டியை திறந்து பாா்த்த போது பணத்தை காணவில்லை. இது குறித்து புகாரின் பேரில் திருப்பாலைக்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...