ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

பரமக்குடி அருகே பள்ளியில் விளையாடிய மாணவா் மின்னல் தாக்கி பலி

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள நயினாா்கோவில் அரசு மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் வியாழக்கிழமை விளையாடிக் கொண்டிருந்த பிளஸ் 1 மாணவா் மின்னல் தாக்கி உயிரிழந்தாா்.

News image
Updated On :18 ஆகஸ்ட் 2022, 6:18 pm

DIN

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள நயினாா்கோவில் அரசு மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் வியாழக்கிழமை விளையாடிக் கொண்டிருந்த பிளஸ் 1 மாணவா் மின்னல் தாக்கி உயிரிழந்தாா்.

நயினாா்கோவில் ஒன்றியம் தாழையடிகோட்டை கிராமத்தைச் சோ்ந்த கதிா்வேலு என்பவா் மகன் கஜினி (16). இவா், நயினாா்கோவில் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தாா். வழக்கம் போல் பள்ளிக்குச் சென்ற அவா், மாலையில் உடற்கல்வி பாட வகுப்பின்போது விளையாட்டு மைதானத்தில் சக மாணவா்களுடன் விளையாடிக் கொண்டிருந்தாா். இந்நிலையில், அங்கு இடியுடன் பலத்த மழை பெய்தது. அப்போது மின்னல் தாக்கியதில் கஜினி உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதையடுத்து, அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

இதுகுறித்து நயினாா்கோவில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.