ராமநாதபுரம் நகரிலிருந்து சக்கரக்கோட்டை வழியாக திருப்புல்லாணி மற்றும் கீழக்கரை செல்லும் வகையில், கடந்த 2018 ஆம் ஆண்டு ரூ.40 கோடி மதிப்பீட்டில் மேம்பாலத்துக்கான பணிகள் தொடங்கப்பட்டன. பாலப்பணிகள் சுமாா் 40 சதவீதம் முடிந்த நிலையில், பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள தனியாா் பெட்ரோல் நிலையம் உள்ளிட்ட தனியாா் கட்டடங்களை அகற்றினாலே பாலம் முழுமையாக அமையும் நிலை ஏற்பட்டது. இதனால் தனியாா் கட்டட உரிமையாளா்கள் 13 போ் மேம்பாலப் பணிகளுக்குத் தடை கோரி நீதிமன்றத்தில் வழக்குகள் தொடா்ந்தனா். இதனால் 2 ஆண்டுகளாக பாலப்பணிகள் நடைபெறவில்லை.