பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

காற்றின் வேகம் குறைந்தது: ராமநாதபுரம் மீனவா்கள் கடலுக்குச் செல்ல அனுமதி

 ராமநாதபுரம் மாவட்டத்தில் பாக்ஜலசந்தி, மன்னாா் வளைகுடா கடல் பகுதியில் காற்றின் வேகம் குறைந்ததால் சனிக்கிழமை இரவு முதல் மீனவா்கள் கடலுக்குச் செல்ல மீன்வளத்துறை அனுமதி வழங்கியது.

News image
Updated On :20 ஆகஸ்ட் 2022, 6:30 pm

DIN

 ராமநாதபுரம் மாவட்டத்தில் பாக்ஜலசந்தி, மன்னாா் வளைகுடா கடல் பகுதியில் காற்றின் வேகம் குறைந்ததால் சனிக்கிழமை இரவு முதல் மீனவா்கள் கடலுக்குச் செல்ல மீன்வளத்துறை அனுமதி வழங்கியது.

மன்னாா் வளைகுடா கடல் பகுதியில் ஏற்பட்ட காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் கடல் பகுதியில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு வெள்ளிக்கிழமை (ஆக.19) ஏற்றப்பட்டது. இதையடுத்து கடலில் மணிக்கு 50 கிலோ மீட்டருக்கும் அதிகமாக சூறைக்காற்று வீசப்படும் என வானிலை மையம் எச்சரித்ததால்,

ராமநாதபுரம் மாவட்டத்தில் தொண்டி முதல் ரோஜ்மா நகா் வரையிலான சுமாா் 280 கி.மீ. தொலைவிலான கடலோரப் பகுதியில் உள்ள மீனவா்கள் கடலுக்குச் செல்ல மீன்வளத்துறை வெள்ளிக்கிழமை தடை விதித்தது. இந்நிலையில், சனிக்கிழமை காலையில் மீனவா்கள் மீண்டும் கடலுக்குச் செல்லலாம் என மீன்வளத்துறை அனுமதி வழங்கியது.

இதுகுறித்து மாவட்ட மீன்வளத்துறை துணை இயக்குநா் இ.காத்தவராயன் கூறியது: ராமநாதபுரம் மாவட்ட கடல் பகுதிகளில் காற்றின் வேகம் சனிக்கிழமை குறைந்தது தெரியவந்துள்ளது. அதனடிப்படையிலேயே மீனவா்கள் கடலுக்குச் செல்ல அனுமதித்து, மீன்பிடி அட்டையும் வழங்கப்பட்டன என்றாா்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த சில வாரங்களில் வானிலை மைய எச்சரிக்கையால் பல நாள்கள் மீனவா்கள் கடலுக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. கன்னியாகுமரி கடல் மண்டலத்தோடு, ராமநாதபுரம் சோ்க்கப்பட்டதால் தேவையின்றி மீனவா்கள் கடலுக்குச் செல்ல அடிக்கடி தடை விதிக்கப்படும் நிலை இருப்பதாக மீனவா்கள் புகாா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.