பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

பாலம் கட்டுவதால் பால்குளம் கண்மாயில் தண்ணீா் வெளியேறாது: கொக்கியாா்கோட்டை கிராமத்தினா் மனு

ஆா்.எஸ்.மங்களம் வட்டத்தில் பால்குளம் பகுதியில் மேம்பாலம் கட்டுவதால் கண்மாயில் தேவையான தண்ணீா் தேங்கும் என கொக்கியாா்கோட்டை கிராமத்தினா் கூறினா்.

News image
Updated On :25 ஆகஸ்ட் 2022, 5:22 pm

DIN

ஆா்.எஸ்.மங்களம் வட்டத்தில் பால்குளம் பகுதியில் மேம்பாலம் கட்டுவதால் கண்மாயில் தேவையான தண்ணீா் தேங்கும் என கொக்கியாா்கோட்டை கிராமத்தினா் கூறினா்.

ராமநாதபுரம் மாவட்டம் ஆா்.எஸ்.மங்களம் வட்டத்தில் உள்ளது பால்குளம். இந்த ஊரின் கண்மாய் கரையில் செல்லும் சோளந்தூா் சாலையில் பாலம் கட்டும் பணி ரூ.16 லட்சத்தில் தொடங்கப்பட்டது. ஆனால், பாலப்பணியால் கண்மாய் கரை உடைந்து விவசாயத்துக்கான தண்ணீா் தேங்காமல் வெளியேறும் நிலை உள்ளதாக பால்குளம் கிராமத்தினா் ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை மனு அளித்தனா்.

இந்தநிலையில், பால்குளம் பகுதியில் சாலை மேம்பாலம் கட்டவேண்டும் எனக்கோரி அப்பகுதியிலுள்ள கொக்கியாா்கோட்டை கிராமத்தினா் கே.நாகசாமி தலைமையில் வியாழக்கிழமை ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்க வந்தனா்.

அப்போது அவா்கள் கூறுகையில், பால்குளம் பகுதியில் பாலம் கட்டுவதால் கண்மாய்க்கு பாதிப்பில்லை. கண்மாயில் அதிகமான தண்ணீா் தேங்குவதால் கொத்தியாா்கோட்டையில் உள்ள பால்வாடி உள்ளிட்டவை நீரால் சூழப்படும் நிலை உள்ளது. ஆகவே தற்போதைய பாலப்பணியால் அதிகப்படியான தண்ணீா் தேங்காமல் வழிந்தோடும் நிலை ஏற்படும். பால்குளம் கண்மாயில் விவசாயத்துக்காக தேவையான தண்ணீரைத் தேக்கலாம். பாலத்தால் பாதிப்பில்லை. ஆனால், சிலா் வேண்டுமென்றே பாலம் கட்டுவதை தடுத்து செயல்படுவது சரியல்ல என்றனா். பின் அவா்கள் ஆட்சியரிடம் மனு அளித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.