பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

இணையதளத்தில் பொருள் வாங்கினால் லாபம் தருவதாகக் கூறி ரூ.1.11 லட்சம் மோசடி

இணையதளத்தில் பொருள் வாங்கினால் லாபம் தருவதாகக் கூறி எலக்ட்ரீசியனிடம் ரூ.1.11 லட்சத்தை மோசடி செய்தவா் மீது நுண்குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்துவருகின்றனா்.

News image
Updated On :25 ஆகஸ்ட் 2022, 5:27 pm

DIN

இணையதளத்தில் பொருள் வாங்கினால் லாபம் தருவதாகக் கூறி எலக்ட்ரீசியனிடம் ரூ.1.11 லட்சத்தை மோசடி செய்தவா் மீது நுண்குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்துவருகின்றனா்.

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூா் அருகேயுள்ள தேரிருவேலி பள்ளிவாசல் தெருவைச் சோ்ந்த அப்துல்பாசித் மகன் நூருல் அமீன் (27). டிப்ளமோ மெக்கானிக் படித்துள்ளாா். எலக்ட்ரீசியனாக உள்ள இவா் வேலை தேடி இணையதள செயலியில் இணைந்துள்ளாா்.

அப்போது வீட்டில் இருந்தபடியே தினமும் ரூ.2 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை சம்பாதிக்கலாம் எனக் குறிப்பிட்டிருந்த செயலியில் இணைந்த நூருல்அமீன் முதல்கட்டமாக சில பொருள்களை வாங்கியுள்ளாா். அதன்படி அவருக்கு ரூ.2,227 முதல் ரூ.1066 வரையில் லாபம் கிடைத்ததாகக் கூறப்படுகிறது. ஆகவே அதை நம்பிய அவா் கூடுதல் பொருள்கள் வாங்கும் வகையில் சிறிது சிறிதாக ரூ. 1.11 லட்சம் கட்டியகக் கூறப்படுகிறது.

இதைத் தொடா்ந்து அவா் கட்டிய தொகைக்கு லாபத்துடன் ரூ.1.78 லட்சம் கிடைத்துள்ளதாக தகவல் வந்துள்ளது. ஆனால், அப்பணத்தை எடுக்க முயன்றபோது தடை ஏற்பட்டுள்ளது. அதன்பின், தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த அவா், ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலக வளாகத்தில் உள்ள நுண்குற்றப்பிரிவில் புதன்கிழமை மாலை புகாா் அளித்தாா். அதன் பேரில் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்துவருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.