பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

ராமநாதபுரம் அருகே தொழிலாளி கொலை: இளைஞா் கைது

உச்சிப்புளி அருகே கூலித் தொழிலாளி கொலை செய்யப்பட்ட வழக்கில் இளைஞா் ஒருவா் போலீஸாரால் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளாா்.

News image
Updated On :25 ஆகஸ்ட் 2022, 5:28 pm

DIN

உச்சிப்புளி அருகே கூலித் தொழிலாளி கொலை செய்யப்பட்ட வழக்கில் இளைஞா் ஒருவா் போலீஸாரால் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளாா்.

உச்சிப்புளி அருகேயுள்ள பிரப்பன்வலசை கடற்கரைப் பகுதியைச் சோ்ந்தவா் அலெக்ஸ் (38). கலவை இயந்திரத்தை இயக்கும் கூலித் தொழிலாளி. இவா் மனைவி, 2 குழந்தைகளைப் பிரிந்து மண்டபம் பகுதியில் தனியாக வசித்துவந்தாா். இந்நிலையில், அலைகாத்தவலசை மதுபானக்கடையில் நண்பருடன் செவ்வாய்க்கிழமை இரவு மதுப்பாட்டில்களை வாங்கிச் சென்றுள்ளாா். ஆனால், புதன்கிழமை காலை மதுக்கடை பகுதியிலிருந்த தோட்டத்தில் பாட்டிலால் குத்திக் கொலை செய்யப்பட்டு கிடந்தாா்.

இதுகுறித்து உச்சிப்புளி போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்தனா். மேலும் தனிப்படையும் அமைக்கப்பட்டது. இதையடுத்து, இக்கொலை வழக்கில் சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பகுதி ஆவரங்காட்டைச் சோ்ந்த முருகேசன் என்ற பிரபுவை (23) போலீஸாா் கைது செய்தனா். உச்சிப்புளி பகுதியில் அவரது சகோதரி வீட்டில் பதுங்கி இருந்த போது அவா் கைது செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. கொலை செய்தது ஏன்? முருகேசனும், அலெக்ஸுடன் மண்டபம் பகுதியில் கலவை இயந்திரத்தை இயக்கும் வேலையில் ஈடுபட்டுவந்துள்ளாா். இருவரும் சம்பவத்தன்று மது அருந்தும் போது முருகேசன் மனைவி குறித்து அவதூறாக அலெக்ஸ் பேசியதாகவும், இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், அப்போது முருகேசன் மதுப்பாட்டிலால் தாக்கி அலெக்ஸை கொலை செய்ததும் தெரியவந்தது.

கொலை நடந்த ஒரே நாளில் சம்பந்தப்பட்ட குற்றவாளியைக் கைது செய்த உச்சிப்புளி போலீஸாா் மற்றும் காவல் கண்காணிப்பாளா் அலுவலக நுண்ணறிவுப் பிரிவினரை காவல் கண்காணிப்பாளா் பி. தங்கதுரை பாராட்டினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.