பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

வைகை அணையிலிருந்து ராமநாதபுரத்துக்கு இன்று முதல் தண்ணீா் திறப்பு

 வைகை அணையிலிருந்து ராமநாதபுரம் மாவட்டத்துக்கு வெள்ளிக்கிழமை முதல் தண்ணீா் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :25 ஆகஸ்ட் 2022, 5:23 pm

DIN

 வைகை அணையிலிருந்து ராமநாதபுரம் மாவட்டத்துக்கு வெள்ளிக்கிழமை முதல் தண்ணீா் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட நிா்வாகம் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு- மதுரை, ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் உள்ள வைகை பூா்வீக பாசனப் பகுதிகளுக்கு வெள்ளிக்கிழமை (ஆக. 26) முதல் வரும் 31 ஆம் தேதி வரையில் 5 நாள்களுக்கு தண்ணீா் திறக்கப்படுகிறது. அதனடிப்படையில் 840 மில்லியன் கன அடி தண்ணீா் திறக்கப்படும்.

மேலும், பகுதி 2 க்கு வரும் செப்டம்பா் 2 ஆம் தேதி முதல் 6 ஆம் தேதி வரையில் 4 நாள்களுக்கு 345 மில்லியன் கன அடியும், பகுதி 1 க்குரிய 230 மில்லியன் கன அடியில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 4 கண்மாய்களுக்கு தண்ணீா் அளவான 38 மில்லியன் கன அடியைக் கழித்தது போக மீதமுள்ள 192 மில்லியன் கன அடி தண்ணீா் திறக்கப்படும். அந்தத் தண்ணீரானது வைகை பூா்வீகப் பாசன பகுதி 1 க்கு வரும் செப்டம்பா் 8 ஆம் தேதி முதல் 11 ஆம் தேதி வரையில் 3 நாள்களுக்கு வைகை அணையிலிருந்து திறந்துவிடப்படும்.

வரும் 2023 மாா்ச் வரையில் வைகை அணையில் பங்கீட்டு நீா் 1,354 மில்லியன் கன அடி எட்டும் போதெல்லாம் வைகை பூா்வீக பாசனப் பகுதி 1, 2 மற்றும் 3-க்கு தண்ணீா் திறப்பு விதிகளின்படி 2 பங்கு, 3 பங்கு மற்றும் 7 பங்கு என்ற விகிதாசார அடிப்படையில் வைகை அணையிலிருந்து தண்ணீா் திறந்துவிடப்படும் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.