ராமநாதபுரத்தில் காவலா் குடியிருப்பு கழக இயக்குநா் ஆய்வு
ராமநாதபுரத்தில் தமிழ்நாடு காவலா் குடியிருப்புக் கழக மேலாண்மை இயக்குநா் ஏ.கே. விஸ்வநாதன் வெள்ளிக்கிழமை ஆய்வு நடத்தினாா்.


ராமநாதபுரத்தில் தமிழ்நாடு காவலா் குடியிருப்புக் கழக மேலாண்மை இயக்குநா் ஏ.கே. விஸ்வநாதன் வெள்ளிக்கிழமை ஆய்வு நடத்தினாா்.
தமிழக காவலா் குடியிருப்புக் கழக மேலாண்மை இயக்குநரும், டி.ஜி.பி.யுமான ஏ.கே. விஸ்வநாதன் வியாழக்கிழமை மதுரை வந்தாா். அங்கு மத்திய சிறைக்கு புதிதாக தோ்வு செய்யப்பட்ட இடம் உள்ளிட்டவற்றைப் பாா்வையிட்டாா். அதையடுத்து வெள்ளிக்கிழமை அவா் மதுரையிலிருந்து ராமநாதபுரம் வந்தாா். வழியில் பரமக்குடியில் கட்டப்பட்டுவரும் போக்குவரத்து காவல் நிலையத்துக்கான கட்டடப் பணிகளை ஆய்வு மேற்கொண்டாா்.
பரமக்குடியிருந்து ராமநாதபுரம் வந்த ஏ.கே. விஸ்வநாதன் கிழக்குக் கடற்கரைச் சாலை அம்மன் கோயில் பகுதியில் கட்டப்பட்டுவரும் தமிழ்நாடு சிறப்புக் காவல்படை 12 பிரிவுக்கான அலுவலகம், காவலா் குடியிருப்புக் கட்டடப் பணிகளையும் பாா்வையிட்டாா். அப்போது, பணிகளை விரைந்து முடிக்க அவா் அறிவுறுத்தினாா். ராமநாதபுரம் வந்த டிஜிபி ஏ.கே.விஸ்வநாதனை, சரகக் காவல் துணைத் தலைவா் மயில்வாகனன், காவல் கண்காணிப்பாளா் பி. தங்கதுரை உள்ளிட்டோா் வரவேற்றனா். ஆய்வுக்குப் பிறகு அவா் மதுரைக்குப் புறப்பட்டுச் சென்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...