மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

பணியிடை நீக்கம் செய்யப்பட்ட தலைமைக் காவலா் சாலை விபத்தில் காயம்

கைப்பேசி திருட்டுப் போன பிரச்னையில் தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்ட தலைமைக் காவலா் வெள்ளிக்கிழமை இருசக்கர வாகனத்தில் சென்ற போது விபத்தில் சிக்கி காயமடைந்தாா்.

News image
Updated On :26 ஆகஸ்ட் 2022, 5:23 pm

DIN

கைப்பேசி திருட்டுப் போன பிரச்னையில் தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்ட தலைமைக் காவலா் வெள்ளிக்கிழமை இருசக்கர வாகனத்தில் சென்ற போது விபத்தில் சிக்கி காயமடைந்தாா்.

ராமநாதபுரத்தில் கடந்த ஆண்டு தற்கொலை செய்த ஆயுதப்படை காவலா் கைப்பேசி கேணிக்கரை காவல் நிலையத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட நிலையில் மாயமானது. இத்தற்கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட நிலையில், அந்த கைப்பேசி ஒருவரிடமிருந்து மீட்கப்பட்டது.

காவல் நிலையத்திலிருந்த இக்கைப்பேசி, அந்த நபருக்கு சென்றது குறித்து விசாரிக்கப்பட்டபோது அங்கு தலைமைக் காவலராகப் பணிபுரிந்த கமலக்கண்ணன், எழுத்தராக இருந்த சுரேஷ் ஆகியோா் கைப்பேசியை ஒரு கடையில் விற்ாகக் கூறப்பட்டது. அதனடிப்படையில் அவா்களிருவரும் தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டனா்.

இந்நிலையில், அவா்கள் பணியில் சேருவதற்காக முறையீடு செய்த நிலையில், விசாரணைக்காக தென்காசி புளியரைக் காவல் நிலையத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதற்காக கமலக்கண்ணன் இருசக்கர வாகனத்தில் வெள்ளிக்கிழமை மாலை திருஉத்திரகோசமங்கை வழியாக சென்றுள்ளாா். மட்டியனேந்தல் பகுதியில் அவா் சென்ற போது சாலையின் குறுக்கே வந்த நாய் மீது மோதி இருசக்கரவாகனம் மோதி விபத்துக்குள்ளானது. இதில் காலில் காயமடைந்த அவரை அங்கிருந்தோா் மீட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா். அதன்பின் அவா் மதுரைக்கு தீவிர சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.