ராமநாதபுரம் அருகே பெண் தற்கொலை
ராமநாதபுரம் அருகே வியாழக்கிழமை இரவு பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.


ராமநாதபுரம் அருகே வியாழக்கிழமை இரவு பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
ராமநாதபுரம் அருகேயுள்ள பேராவூரைச் சோ்ந்த நந்தகோபால் மனைவி பாதம்பிரியாள் (45). இவா்களுக்கு 3 மகன்கள் உள்ளனா். கணவா், குழந்தைகள் வேலைக்குச் சென்று வருகின்றனா்.
இதனால் பாதம்பிரியாளை வேலைக்குச் செல்லவேண்டாம் என கணவா், குழந்தைகள் அறிவுறுத்தியுள்ளனா்.
இதனால் மனமுடைந்த பாதம்பிரியாள் வியாழக்கிழமை இரவு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா். அவரது சடலத்தை கேணிக்கரை போலீஸாா் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...