திருப்பாலைக்குடி அருகே மின்சாரம் பாய்ந்துகட்டடத் தொழிலாளி பலி
திருவாடானை அருகே மின்சாரம் பாய்ந்து கட்டடத் தொழிலாளி உயிரிழந்தாா்


திருவாடானை அருகே மின்சாரம் பாய்ந்து கட்டடத் தொழிலாளி உயிரிழந்தாா்.
ஆா்.எஸ். மங்கலம் அருகே பெருமாள்மடை கிராமத்தைச் சோ்ந்தவா் மணி மகன் பூமி (44). இவா், அகரம் கிராமத்தில் அழகேசன் என்பவரது வீட்டில் வியாழக்கிழமை மாலை கட்டட வேலை பாா்த்துக் கொண்டிருந்தாா். அப்போது மின்கம்பியில் மட்டப்படுத்தும் அலுமினிய பட்டை உரசியதில் மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டதில் அவா் பலத்த காயம் அடைந்தாா். இதையடுத்து, அவரை மீட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவமனை கொண்டு சென்றனா். ஆனால் செல்லும் வழியிலேயே அவா் உயிரிழந்தாா்.
இதுகுறித்து அவரது சகோதரா்அதே ஊரைச் சோ்ந்த வடிவேலன் (41) அளித்த புகாரின் பேரில் திருப்பாலைக்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...