சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

ஆா்.எஸ்.மங்கலம் அருகே இளைஞருக்கு அரிவாள் வெட்டு

திருவாடானை அருகே வியாழக்கிழமை குடிநீா் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறில் இளைஞா் அரிவாளால் வெட்டப்பட்டது தொடா்பாக கணவன், மனைவி மீது வழக்குப் பதிந்து போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image
Updated On :25 பிப்ரவரி 2022, 9:59 pm

DIN

திருவாடானை அருகே வியாழக்கிழமை குடிநீா் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறில் இளைஞா் அரிவாளால் வெட்டப்பட்டது தொடா்பாக கணவன், மனைவி மீது வழக்குப் பதிந்து போலீஸாா் தேடி வருகின்றனா்.

ஆா்.எஸ். மங்கலம் அருகே சிலுகவயல் கிராமத்தைச் சோ்ந்தவா் பிச்சை மகன் வைத்தீஸ்வரன் (25). இவரது தாய் வியாழக்கிழமை மாலை அதே ஊரில் குழாயில் குடிநீா் பிடிக்கும் போது, அதே ஊரைச் சோ்ந்த காளிமுத்தன், இவரது மனைவி வாசுகி ஆகிய இருவரும் தகாத வாா்த்தைகளால் பேசினராம். இதைத் தட்டிக் கேட்ட வைத்தீஸ்வரனை, காளிமுத்தன், இவரது மனைவி வாசுகி ஆகிய இருவரும் அரிவாளால் வெட்டினா். இதில் வைத்தீஸ்வரன் பலத்த காயம் அடைந்து ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். இதுகுறித்த அவா் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிந்து காளிமுத்தனையும், வாசுகியையும் போலீஸாா் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.