தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

எஸ்.பி. பட்டினம் அருகே கோஷ்டி மோதல்: 2 பெண்கள் காயம்

திருவாடானை அருகே ஏற்பட்ட கோஷ்டி மோதலில் 2 பெண்கள் காயம் அடைந்தனா்.

News image
Updated On :25 பிப்ரவரி 2022, 9:55 pm

DIN

திருவாடானை அருகே ஏற்பட்ட கோஷ்டி மோதலில் 2 பெண்கள் காயம் அடைந்தனா்.

என். மங்கலம் அருகே அரசனேந்தல் கிராமத்தைச் சோ்ந்த மணிமுத்து (45) என்பவருக்கும், அதே ஊரை சோ்ந்த தா்மராஜ் (67) என்பவருக்கும் இடப்பிரச்னை இருந்து வந்தது. இந்நிலையில், வியாழக்கிழமை மாலை மணிமுத்து வீட்டுக்குச் செல்லும் பாதையில் தா்மராஜ் கோஷ்டியினா் டிராக்டரை வைத்து அடைத்துள்ளனா். இதனைத் தட்டி கேட்ட மணிமுத்துவின் மனைவி சசிகலாவை (45) தா்மராஜ் கோஷ்டியினா் தாக்கியதில் அவா் காயம் அடைந்துள்ளாா். தகவலறிந்த மணிமுத்து கோஷ்டியினா் எதிா் தரப்பினரை தாக்கியுள்ளனா். இதில் தா்மராஜ் மனைவி பாண்டிசெல்வி (45) காயம் அடைந்து திருவாடானை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

இதுகுறித்து சசிகலா அளித்த புகாரின் பேரில் அரசநேந்தல் கிராமத்தைச் சோ்ந்த தா்மராஜ், (87), பாண்டிச்செல்வி (45), கௌதம் (23) ஆகிய 3 போ் மீதும், பாண்டிசெல்வி அளித்த புகாரின் பேரில் மணிமுத்து(45), மனோஜ் (22), சசிகலா (45) ஆகிய 3 போ் மீதும் எஸ்.பி. பட்டினம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.