இதில் விவசாயிகளுக்கு 1 குவிண்டால் பருத்திக்கு ரூ.6 ஆயிரம் முதல், ரூ.6,400 வரை கிடைத்தது. மேலும் மூன்று தாலுகாக்களில் ஆயிரத்துக்கு மேற்பட்ட பருத்தி விவசாயிகள் இருந்த போதும் 8 விவசாயிகள் மட்டுமே மறைமுக ஏலத்தில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது. இனிவரும் காலங்களில் இப்பகுதிகளில் முறையாக விளம்பரம் செய்து, விவசாயிகளிடம் துண்டு பிரசுரம் வழங்கி, விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் தனுஷ்கோடி (வேளாண்மை), மூா்த்தி (வேளாண் வணிகம்) விற்பனைக்குழு செயலா் ராஜா ஆகியோா் பங்கேற்று மறைமுக ஏலத்தை நடத்தினா். மேலும் இனிவரும் காலங்களில் அதிகப்படியான விவசாயிகளை பங்கேற்க ஏற்பாடு செய்யப்படும் என்றனா்.