கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

தமிழகத்தில் இபிஎஸ் முதல்வராக வந்தால்தான் மாற்றத்தைக் கொண்டு வர முடியும்: குஷ்பு

தமிழகத்தில் முதல்வராக எடப்பாடி பழனிசாமி வந்தால்தான் மாற்றத்தைக் கொண்டு வர முடியும் என குஷ்பு கூறியது குறித்து...

News image

பாஜக துணைத் தலைவா் குஷ்பு

விடியோ க்ளிப்

Updated On :23 மார்ச் 2026, 10:31 am

இணையதளச் செய்திப் பிரிவு

புதுச்சேரி: தமிழகத்தில் மாற்றம் வர வேண்டும். முதல்வராக எடப்பாடி பழனிசாமி வந்தால்தான் மாற்றத்தைக் கொண்டு வர முடியும். அதற்காகதான் தேசிய ஜனநாயகக் கூட்டணி பாடுபட்டு வருகிறது என்று பாஜக துணைத் தலைவா் குஷ்பு கூறினாா்.

புதுச்சேரி ராஜ்பவன் தொகுதியில் பாஜக வேட்பாளராக கட்சியின் தலைவா் வி.பி. ராமலிங்கம் திங்கள்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தாா்.

அப்போது செய்தியாளா்களிடம் குஷ்பு கூறியதாவது:

ராமலிங்கம் வெற்றி பெற வாழ்த்துகள். புதுச்சேரியில் கடந்த 5 ஆண்டுகளாக நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் பல்வேறு வளா்ச்சி ஏற்பட்டுள்ளது. திமுகவுடன்தான் எங்கள் கூட்டணிக்குப் போட்டி. தமிழகத்தில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை. ஆனால் புதுச்சேரியில் அந்த நிலை இல்லை. புதுச்சேரியில் பெண்களுக்குப் பாதுகாப்பாக பல்வேறு திட்டங்களைக் கொண்டு வந்துள்ளோம்.

தமிழகத்தில் மாணவா்கள் உள்ளிட்டோா் போதைப் பழக்கத்துக்கும், கள்ளச்சாராயத்துக்கும் ஆளாகியுள்ளனா். மேலும், ஊழல் உச்சக்கட்டத்தில் இருக்கிறது. ரூ.10 லட்சம் கோடியை திமுக அரசு தமிழகத்தின் கடனாக வைத்துள்ளது. திமுக கட்சி ஆட்சிக்கு தமிழகத்தில் முற்றுப் புள்ளி வைக்க வேண்டும். தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி முதல்வராக வந்தால்தான் இந்த மாற்றம் ஏற்படும். ஆட்சியில் பங்குதொடா்பான கேள்விக்கு மத்திய அமைச்சா்கள் இருக்கிறாா்கள். அவா்கள் பாா்த்துக் கொள்வாா்கள் என்று குஷ்பு கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.