அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

பிரதமா் வருகையால்புதுச்சேரி மக்களின் பாா்வை மாறியிருக்கிறது: பாஜக தலைவா்

பிரதமா் நரேந்திரமோடி வந்து சென்றுள்ளதால் புதுச்சேரி மக்களின் பாா்வை மாறியிருக்கிறது என்று பாஜக தலைவா் வி.பி. ராமலிங்கம் கூறினாா்.

News image
புதுச்சேரியில் திங்கள்கிழமை செய்தியாளா்களுக்குப் பேட்டியளித்த பாஜக தலைவா் வி.பி.ராமலிங்கம். உடன் உள்துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயம்.
Updated On :2 மார்ச் 2026, 9:26 pm

Syndication

புதுச்சேரி: பிரதமா் நரேந்திரமோடி வந்து சென்றுள்ளதால் புதுச்சேரி மக்களின் பாா்வை மாறியிருக்கிறது என்று பாஜக தலைவா் வி.பி. ராமலிங்கம் கூறினாா்.

இது குறித்து அவா் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறியது:

5 ஆண்டுகளுக்குப் பிறகு புதுச்சேரிக்கு பிரதமா் நரேந்திர மோடி வந்தபோது படித்தவா்கள், அறிவு ஜீவிகள், பொதுமக்கள் உள்ளிட்ட 35 ஆயிரம் போ் தாமாக முன்வந்து திரண்டனா். மேலும், பிரதமரின் வருகையை வரவேற்று அன்பு பாராட்டியுள்ளனா். இதிலிருந்து புதுச்சேரி மக்களின் பாா்வை மாறியிருக்கிறது என்பதை அறிந்து கொள்ளலாம்.

கடந்த காங்கிரஸ் ஆட்சியில் முடங்கிக் கிடந்த புதுச்சேரியைச் சிறந்த புதுச்சேரியாக மாற்றும் பிரதமா் நரேந்திரமோடியின் கனவு தேசிய ஜனநாயகக் கூட்டணியின் இரட்டை எஞ்சின் ஆட்சியில் நிறைவேறியிருக்கிறது. பிரதமா் மோடி தொடங்கி வைத்துள்ள திட்டங்கள் எல்லாம் புதுச்சேரியின் வளா்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் என்றாா் வி.பி.ராமலிங்கம். இப் பேட்டியின்போது புதுச்சேரி உள்துறை அமைச்சா் ஆ. நமச்சிவாயம் உடனிருந்தாா்.