தேர்தலில் தனித்துப் போட்டியிட காங்கிரஸுக்கு தைரியமில்லை: குஷ்பு சவால்
பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடட்டும் என்று பாஜக தலைவர் குஷ்பு சவால் விடுத்துள்ளது பற்றி...


தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடட்டும் என்று பாஜக தலைவர் குஷ்பு சவால் விடுத்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களுடன் தமிழக பாஜகவின் துணைத் தலைவர் குஷ்பு பேசுகையில், காங்கிரஸை பொருத்தவரையில், தனித்து நிற்க அவர்களுக்கு தகுதியோ தைரியமோ கிடையாது. திமுகவிடம் பேரம் பேசிக் கொண்டிருக்கின்றனர்; மறுபுறம் விஜய்யிடமும் (தவெக) பேரம் பேசிக் கொண்டிருக்கின்றனர்.
யாரிடமிருந்து அதிக லாபம் வருகிறதோ அவர்களிடம் சென்று விடுவார்கள். யார் அதிக தொகுதிகளும் ஆட்சியிலும் பங்கு தருகிறார்களோ அவர்களிடம் சென்று விடுவார்கள். இனிவரும் காலங்களில், அவர்களால் நிச்சயமாக மத்தியில் ஆட்சியைப் பிடிக்க முடியாது. வெறும் 4 மாநிலங்களில் மட்டும்தான் அவர்கள் ஆட்சி செய்கின்றனர்.
இப்போது ஆட்சியில் பங்கு வேண்டும் என்று திமுகவிடம் கேட்கின்றனர். ஆனால், ஆட்சியில் பங்கு தர மாட்டோம் என்று முதல்வர் சொல்லி விட்டார்.
ஆகையால், அவர்கள் கேட்பதை யார் கொடுக்கிறார்களோ அவர்களிடம் சென்று விடுவார்கள். காங்கிரஸ் எந்தப் பக்கம் என்பது இன்னும் ஒரு வாரத்தில் தெரிந்து விடும். முடிந்தால் இந்தத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டுப் பாருங்கள் என்று தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...