தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடட்டும் என்று பாஜக தலைவர் குஷ்பு சவால் விடுத்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களுடன் தமிழக பாஜகவின் துணைத் தலைவர் குஷ்பு பேசுகையில், காங்கிரஸை பொருத்தவரையில், தனித்து நிற்க அவர்களுக்கு தகுதியோ தைரியமோ கிடையாது. திமுகவிடம் பேரம் பேசிக் கொண்டிருக்கின்றனர்; மறுபுறம் விஜய்யிடமும் (தவெக) பேரம் பேசிக் கொண்டிருக்கின்றனர்.
யாரிடமிருந்து அதிக லாபம் வருகிறதோ அவர்களிடம் சென்று விடுவார்கள். யார் அதிக தொகுதிகளும் ஆட்சியிலும் பங்கு தருகிறார்களோ அவர்களிடம் சென்று விடுவார்கள். இனிவரும் காலங்களில், அவர்களால் நிச்சயமாக மத்தியில் ஆட்சியைப் பிடிக்க முடியாது. வெறும் 4 மாநிலங்களில் மட்டும்தான் அவர்கள் ஆட்சி செய்கின்றனர்.
இப்போது ஆட்சியில் பங்கு வேண்டும் என்று திமுகவிடம் கேட்கின்றனர். ஆனால், ஆட்சியில் பங்கு தர மாட்டோம் என்று முதல்வர் சொல்லி விட்டார்.
ஆகையால், அவர்கள் கேட்பதை யார் கொடுக்கிறார்களோ அவர்களிடம் சென்று விடுவார்கள். காங்கிரஸ் எந்தப் பக்கம் என்பது இன்னும் ஒரு வாரத்தில் தெரிந்து விடும். முடிந்தால் இந்தத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டுப் பாருங்கள் என்று தெரிவித்தார்.
Summary
Congress has no guts to go alone in Tamil Nadu polls, says BJP leader Kushboo
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தேர்தலில் போட்டியிடாததில் அண்ணாமலைக்கு வருத்தம் இல்லை! பாஜக தேசிய தலைவர்

விஜய் மனதில் பாஜகதான் உள்ளது: குஷ்பு

தேர்தலில் போட்டியிடவில்லை: திருமாவளவன் திடீர் அறிவிப்பு!

தேர்தலில் எனது மகன் போட்டியிடவில்லை: கே.வி.தங்கபாலு திட்டவட்டம்
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


