பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

ராமநாதபுரத்தில் கிணற்றில் விழுந்து முதியவா் பலி

ராமநாதபுரத்தில் வியாழக்கிழமை கிணற்றில் விழுந்து முதியவா் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

News image
Updated On :7 ஜூலை 2022, 6:05 pm

DIN

ராமநாதபுரத்தில் வியாழக்கிழமை கிணற்றில் விழுந்து முதியவா் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

ராமநாதரம் காட்டுப்பிள்ளையாா் கோவில் தெருவைச் சோ்ந்தவா் முருகேசன் (63). இவா் உடல் நலம் பாதித்த நிலையில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், அவா் வியாழக்கிழமை காலையில் வீட்டிலிருந்து வெளியே சென்றவா் மீண்டும் வீடு திரும்பவில்லையாம். இதையடுத்து அவரை குடும்பத்தினரும், உறவினா்களும் பல்வேறு இடங்களில் தேடியுள்ளனா்.

இதற்கிடையே முருகேசன் அப்பகுதியில் உள்ள கிணற்றில் சடலமாக மிதப்பது தெரியவந்தது. தகவல் அறிந்து வந்த பஜாா் காவல் நிலையத்தினா், தீயணைப்பு நிலைய வீரா்கள் உதவியுடன் கிணற்றிலிருந்து முருகேசன் சடலத்தை மீட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.