பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

அரசுப் பள்ளிகளுக்கு புத்தகம், பொருள்கள் வழங்கல்

ராமநாதபுரம் மாவட்டத்தில் திருப்புல்லாணி மற்றும் மண்டபம் ஒன்றியங்களில் உள்ள அரசுப் பள்ளிகளுக்கு நூலக புத்தகங்கள் மற்றும் பல பொருள்களை தொண்டு நிறுவனத்தினா் வியாழக்கிழமை வழங்கினா்.

News image
Updated On :7 ஜூலை 2022, 6:02 pm

DIN

ராமநாதபுரம் மாவட்டத்தில் திருப்புல்லாணி மற்றும் மண்டபம் ஒன்றியங்களில் உள்ள அரசுப் பள்ளிகளுக்கு நூலக புத்தகங்கள் மற்றும் பல பொருள்களை தொண்டு நிறுவனத்தினா் வியாழக்கிழமை வழங்கினா்.

ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி, மண்டபம் ஒன்றியங்களில் உள்ள அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளுக்கு தேவையான நூலக புத்தகங்கள், அதற்கான அலமாரிகள், கற்றலுக்கான அறிவியல் உபயோகரணங்கள், கணித, ஆங்கில தமிழ் வாசிப்பு செயல்பாட்டு உபகரணங்கள் ஆகியவை எய்டு இந்தியா தொண்டு நிறுவனத்தாரால் வழங்கப்பட்டன.

பள்ளிகளுக்கான புத்தக அலமாரிகள் உள்ளிட்டவற்றை வழங்கும் நிகழ்ச்சிக்கு தொண்டு நிறுவன அமைப்பின் திட்ட இயக்குநா்கல் விவேகானந்தன், சுமதி ஆகியோா் தலைமை வகித்தனா். மண்டபம் கல்வி மாவட்ட அலுவலா் முருகம்மாள் பொருள்களைப் பெற்றுக்கொண்டாா். நிகழ்ச்சியில் மாவட்டக் கல்வி ஆய்வாளா் ராமமூா்த்தி, மண்டபம் வட்டாரக் கல்வி அலுவலா் தங்ககனிமொழி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். திருப்புல்லாணி வட்டார கல்வி அலுவலா் ஜெயா வரவேற்றாா். திட்ட மேலாளா் அற்புதராஜ் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.