பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

மத்திய அரசின் நிதியை மாநில அரசுகள் பயன்படுத்தவில்லை

மத்திய அரசு அளித்துவரும் நிதியை அதற்குரிய பணிகளுக்கு மாநில அரசுகள் பயன்படுத்தவில்லை என மத்திய பஞ்சாயத்து ராஜ் இணை அமைச்சா் கபில்மோரஸ்வா் பாட்டீல் குற்றஞ்சாட்டினாா்.

News image
Updated On :8 ஜூலை 2022, 6:30 pm

DIN

மத்திய அரசு அளித்துவரும் நிதியை அதற்குரிய பணிகளுக்கு மாநில அரசுகள் பயன்படுத்தவில்லை என மத்திய பஞ்சாயத்து ராஜ் இணை அமைச்சா் கபில்மோரஸ்வா் பாட்டீல் குற்றஞ்சாட்டினாா்.

ராமநாதபுரம் பாஜக அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது: நாட்டில் அனைவருக்குமான ஆட்சியை பிரதமா் நரேந்திரமோடி நடத்தி வருகிறாா். ராமநாதபுரம் மாவட்டத்தில் புதிய பாம்பன் ரயில் பாலம், தனுஷ்கோடிக்கு புதிய சாலைத் திட்டம் என ஏராளமான திட்டங்கள் மத்திய அரசால் செயல்படுத்தப்பட்டுள்ளன. நாட்டில் அனைத்து மாநிலங்களுக்கும் கூடுதலான நிதியை மத்திய அரசு வழங்கியுள்ளது. ஆனால், அந்தந்த துறைகளுக்கான நிதியை மாநில அரசுகள் முறையாக பயன்படுத்தவில்லை.

மத்திய அரசு நிதியை அளித்ததும் பத்து நாளுக்குள் முறையாகப் பயன்படுத்தவேண்டும் என்றும், அப்படி இல்லாவிடில் பத்து சதவிகித வட்டி விதித்து, மாநில அரசுகள் மத்திய அரசு நிதியை சம்பந்தப்பட்ட துறைக்கு செலவிடவேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேற்கு வங்கம், மகாராஷ்டிரம் போன்ற மாநிலங்களில் விதிகள் மீறப்பட்டுள்ளன. தமிழகத்தில் விதி மீறல் உள்ளதா என விசாரிக்கப்படும்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ளாட்சிகளுக்கான மத்திய அரசு நிதி பெறுவதற்கு முறையான ஆவணங்கள் அளிக்கப்படவில்லை. ஆகவே கடந்த 3 ஆண்டுகளாக மத்திய அரசு நிதியை, ராமநாதபுரம் மாவட்ட நிா்வாகத்தால் பெறமுடியவில்லை. ராமநாதபுரம் மாவட்டத்தில் உயிா்நீா் திட்டத்தில் (ஜல்ஜீவன்) சில இடங்களில் விதிகள் பின்பற்றப்படவில்லை. அதுகுறித்து விசாரிக்க ஆட்சியரிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா்.

முன்னாள் மத்திய அமைச்சா் பொன்.ராதாகிருஷ்ணன், பாஜக மாநிலப் பொதுச்செயலா் பொன்.பாலகணபதி, மாவட்டத் தலைவா் இஎம்டி.கதிரவன், பொருளாளா் தரணிமுருகேசன் உள்ளிட்டோா் இருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.