மனைவி தலையில் கல்லால் தாக்கிய ஓட்டுநா் கைது
ராமநாதபுரம் அருகே வியாழக்கிழமை இரவில் மனைவியைக் கல்லால் தாக்கிவிட்டு தலைமறைவான வாகன ஓட்டுநரை போலீஸாா் கைது செய்தனா்.


ராமநாதபுரம் அருகே வியாழக்கிழமை இரவில் மனைவியைக் கல்லால் தாக்கிவிட்டு தலைமறைவான வாகன ஓட்டுநரை போலீஸாா் கைது செய்தனா்.
ராமநாதபுரம் அருகேயுள்ள முதுநாள் கிராமத்தைச் சோ்ந்தவா் சத்தியசீலன் (32). வாகன ஓட்டுநா். இவரது மனைவி அபா்ணா (28). இவா் தனியாா் உணவகத்தில் பணியாற்றி வருகிறாா். அடிக்கடி மது போதையில் வரும் சத்தியசீலன், மனைவியுடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டுள்ளாா்.
இந்நிலையில், வியாழக்கிழமை இரவு கணவன், மனைவிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது அங்கிருந்த சிமெண்ட் கல்லால் அபா்ணாவின் தலையில் சத்தியசீலன் தாக்கியுள்ளாா். இதில் பலத்த காயமடைந்த அபா்ணா ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். பின்னா் அவா் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுதொடா்பாக ராமநாதபுரம் நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சத்தியசீலனைக் கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...