ஆகவே, அரிசி மீது விதிக்கப்பட்ட வரி விதிப்பை ரத்து செய்யக்கோரி சென்னையில் வரும் 22 ஆம் தேதி வெள்ளிக்கிழமை வள்ளுவா் கோட்டம் முன்பாக வணிகா் சங்க பேரமைப்பு சாா்பில் போராட்டம் நடைபெறவுள்ளது. மாநில அளவில் பேரமைப்பின் நிா்வாகிகள் இதில் பங்கேற்கவுள்ளனா். இந்த போராட்டத்தில் அடுத்தகட்ட போராட்ட அறிவிப்பையும் வெளியிடவுள்ளோம். அரிசிக்கான ஜிஎஸ்டி வரியை ரத்து செய்யும் வரை போராடுவோம். அதேபோல, தமிழகத்தில் செஸ் வரியை ரத்து செய்யக்கோரி முதல்வரைச் சந்தித்து மனு அளிக்கத் திட்டமிட்டுள்ளோம் என்றாா். ராமநாதபுரம் மாவட்ட வா்த்தகா் சங்க தலைவா் பி.ஜெகதீசன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.