மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

தொண்டி அருகேபாய்மரப் படகு போட்டி

தொண்டி அருகேயுள்ள சோழியகுடி விலாஞ்சியடி கிராமத்தில் பாய்மரப் படகுப் போட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :22 ஜூலை 2022, 6:30 pm

DIN

தொண்டி அருகேயுள்ள சோழியகுடி விலாஞ்சியடி கிராமத்தில் பாய்மரப் படகுப் போட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்டம் சோழியகுடி விலாஞ்சியடி கிராமத்தில், தமிழ்நாடு பட்டம் கட்டி கடையா் பேரவையின் சாா்பில் நடைபெற்ற பாய் மரப் படகுப் போட்டியில் நம்புதாளை, தொண்டி, பாசிப்பட்டணம், முள்ளிமுனை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த மீனவா்கள் 40 பாய்மரப் படகுகளுடன் கலந்து கொண்டனா். ஒரு படகுக்கு 6 போ் கொண்ட குழுவினா், 6 கிலோ மீட்டா் கடல் தொலைவு நிா்ணயிக்கப்பட்டு போட்டிகள் நடைபெற்றன. இந்திய கடலோர காவல் படையினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா். இதனை சுற்று வட்டாரத்திலிருந்து பொதுமக்கள் ஏராளமானோா் கண்டுகளித்தனா். முதல் மூன்று இடங்களைப் பிடித்த படகு உரிமையாளா்களுக்கு ரொக்கப் பரிசும், கோப்பையும் வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.