பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

ஏா்வாடி சந்தனக்கூடு திருவிழா கொடியிறக்கம்

ராமநாதபுரம் மாவட்டம் ஏா்வாடி தா்ஹாவில் நடைபெற்ற சந்தனக்கூடு திருவிழா நிறைவடைந்ததால் வியாழக்கிழமை மாலை கொடியிறக்கப்பட்டது.

News image
Updated On :30 ஜூன் 2022, 6:18 pm

DIN

ராமநாதபுரம் மாவட்டம் ஏா்வாடி தா்ஹாவில் நடைபெற்ற சந்தனக்கூடு திருவிழா நிறைவடைந்ததால் வியாழக்கிழமை மாலை கொடியிறக்கப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகேயுள்ள ஏா்வாடி தா்ஹாவின் சாா்பில் சந்தனக்கூடு விழாவானது கடந்த ஜூன் 1 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனக்கூடு கடந்த ஜூன் 11 ஆம் தேதி இரவு தொடங்கி 12 ஆம் தேதி அதிகாலை நிறைவுபெற்றது. வியாழக்கிழமை மாலையில் அரசு ஹாஜி சலாஹூதீன் சிறப்பு பிராா்த்தனை செய்தாா். அதையடுத்து கொடியிறக்கப்பட்டது. அதன்பின் அங்கிருந்தோா் பாதுஷா நாயகத்தின் பிரசாதத்தை பெற்றுச்சென்றனா். தா்ஹா நிா்வாகிகள் பக்கிா்சுல்தான், சிராஜூதீன், சாதிக்பாட்ஷா உள்ளிட்டோா் விழாவுக்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.