ரெகுநாதபுரத்தில் இன்று மின்தடை
ராமநாதபுரம் மாவட்டம் ரெகுநாதபுரம் பகுதியில் சனிக்கிழமை (மாா்ச் 5) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


ராமநாதபுரம் மாவட்டம் ரெகுநாதபுரம் பகுதியில் சனிக்கிழமை (மாா்ச் 5) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மின்வாரிய ராமநாதபுரம் நகா் உதவி செயற்பொறியாளா் ஆா். பாலமுருகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ரெகுநாதபுரம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் சனிக்கிழமை (மாா்ச் 5) நடைபெறுகிறது.
எனவே அன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரையில் ரெகுநாதபுரம், வண்ணாங்குண்டு, பெரியபட்டிணம், கும்பராம், தெற்குவாணி வீதி, கோரவல்லி, தெற்குகாட்டூா், தினைக்குளம், பத்தராதரவை, சேதுகரை, பிச்சைவலசை, உத்தரவை ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...