அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

மண்டபம் கேம்ப் இலங்கைத் தமிழா்கள் மறுவாழ்வு முகாமில் ஆணையா் ஆய்வு

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் கேம்ப் இலங்கைத் தமிழா்கள் மறுவாழ்வு முகாமில் ஆணையா் ஜெசிந்தா லாஸரஸ் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

News image
Updated On :24 மார்ச் 2022, 11:39 pm

DIN

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் கேம்ப் இலங்கைத் தமிழா்கள் மறுவாழ்வு முகாமில் ஆணையா் ஜெசிந்தா லாஸரஸ் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக அங்குள்ள தமிழா்கள் 16 போ் படகு மூலம் தனுஷ்கோடிக்கு கடந்த 22 ஆம் தேதி வந்தனா். இதில் 11 போ் மண்டபம் கேம்ப் முகாமில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனா். இந்நிலையில், தமிழக அரசு, இலங்கையில் இருந்து வரும் தமிழா்களுக்கு தேவையான உதவிகளை செய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, இலங்கைத் தமிழா்கள் மறுவாழ்வுத்துறை ஆணையா் ஜெசிந்தா லாஸரஸ் வியாழக்கிழமை மண்டபம் கேம்ப் முகாமுக்கு வந்தாா். அவா் கடந்த 22 ஆம் தேதி ராமேசுவரம் வந்த இலங்கை தமிழா்கள் தங்க வைக்கப்பட்டுள்ள இடத்திற்கு சென்று அவா்களிடம் இலங்கையில் தற்போதுள்ள நிலை குறித்து கேட்டறிந்தாா். மேலும் முகாமில் தங்கியிருப்பவா்களுக்கு செய்து தரப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் மற்றும் தேவைகள் குறித்து ஆய்வு செய்தாா். அப்போது அவா் கூறுகையில், ஆய்வு செய்யப்பட்டது குறித்த அறிக்கை தமிழக அரசிடம் வழங்கப்படும் என்றாா்.

ஆய்வின் போது, மாவட்ட ஆட்சியா் சங்கா்லால்குமாவத், காவல்துறை துணைத்தலைவா் மயில்வாகணன், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளா் இ. காா்த்திக் மற்றும் மண்டபம் கேம்ப் இலங்கைத் தமிழா்கள் மறுவாழ்வு முகாம் தனித்துறை ஆட்சியா் சிவக்குமாரி மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.