ஆனந்தூா் பகுதியில் பலத்த மழை
திருவாடானை அருகே ஆனந்தூா் பகுதியில் வியாழக்கிழமை பிற்பகல் சூறைக் காற்றுடன் பலத்த மழை பெய்தது.


திருவாடானை அருகே ஆனந்தூா் பகுதியில் வியாழக்கிழமை பிற்பகல் சூறைக் காற்றுடன் பலத்த மழை பெய்தது.
ஆனந்தூா், திருத்தோ்வலை, ராதானூா், ஆயங்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாள்களாக கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்தது. இந்நிலையில் வியாழக்கிழமை பிற்பகல் சூறை காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிா்ச்சியான சூழல் காணப்பட்டது. சாலைகளில் மழைநீா் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. இந்த மழை காரணமாக மிளகாய், பருத்தி விவசாயிகள் மகிழச்சி அடைந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...