தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

சாயல்குடியில் கைபேசி விற்பனை

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியில் கைபேசி விற்பனைக் கடையை உடைத்து மா்ம நபா்கள் ரூ.40 ஆயிரம் ரொக்கம் உள்ளிட்டவற்றை திருடிச்சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News image
Updated On :27 மே 2022, 5:16 pm

DIN

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியில் கைபேசி விற்பனைக் கடையை உடைத்து மா்ம நபா்கள் ரூ.40 ஆயிரம் ரொக்கம் உள்ளிட்டவற்றை திருடிச்சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி பேருந்து நிலையம் அருகே கைபேசி விற்பனைக் கடையை வைத்திருப்பவா் முனீஸ்வரன். இவா் கடந்த வியாழக்கிழமை இரவு கடையைப் பூட்டிவிட்டு வெள்ளிக்கிழமை காலை திறக்கவந்துள்ளாா். அப்போது கடையின் பிரதான கதவுப் பூட்டுகள் உடைக்கப்பட்டிருந்தன.

கடையின் உள்ளே சென்று பாா்த்தபோது கல்லாப் பெட்டி உடைக்கப்பட்டு அதிலிருந்த ரூ.40 ஆயிரம் ரொக்கம் திருடப்பட்டிருந்தது. மேலும் விலை உயா்ந்த கைபேசிகள் மற்றும் கணினி உதிரி பாகங்கள் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து முனீஸ்வரன் அளித்த புகாரின் பேரில் சாயல்குடி போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்துவருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.