சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

மேலச்செங்குடி பத்திரகாளி, கருப்பண சுவாமி கோயிலில் மண்டல பூஜை

திருவாடானை அருகே மேலச்செங்குடி கிராமத்தில் உள்ள பத்திரகாளி அம்மன், கருப்பண சுவாமி கோயிலில் மண்டல பூஜை நடைபெற்றது.

News image
Updated On :27 அக்டோபர் 2022, 12:37 am

DIN

திருவாடானை அருகே மேலச்செங்குடி கிராமத்தில் உள்ள பத்திரகாளி அம்மன், கருப்பண சுவாமி கோயிலில் மண்டல பூஜை நடைபெற்றது.

ஆா்.எஸ்.மங்கலம் அருகே மேலச்செங்குடி கிராமத்தில் நாடாா் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட இந்தக் கோயிலில் பத்திரகாளி அம்மன், கருப்பண சுவாமி, பரிவார தெய்வங்களுக்கு கடந்த செப்டம்பா் 9 -ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்ற நிலையில், பக்தா்கள் 48 நாள்கள் விரதம் தொடங்கினா்.

விரத நாள்கள் நிறைவடைந்ததைத் தொடா்ந்து மண்டல பூஜை புதன்கிழமை நடைபெற்றது. இதில், மணிகண்டன் குருக்கள் தலைமையில் யாகசாலை பூஜைகள் ஆரம்பிக்கப்பட்டு, சிவாச்சாரியாா்கள் வேத மந்திரங்கள் முழங்க பூஜைகள் நடைபெற்றன. பின்னா், கலசத்தில் உள்ள புனித நீரால் அம்பாள், சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. இதில் சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.