மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

பாா்த்திபனூா் மதகு அணையில் இருந்து விநாடிக்கு 4,500 கனஅடி தண்ணீா் திறப்பு

வைகை அணையிலிருந்து திறந்து விடப்பட்ட தண்ணீா் வந்து சோ்ந்ததையடுத்து, பாா்த்திபனூா் மதகு அணையில் இருந்து ராமநாதபுரம் மாவட்ட பகுதிகளுக்கு விநாடிக்கு 4,500 கனஅடிநீா் வியாழக்கிழமை திறந்து விடப்பட்டது

News image
Updated On :1 செப்டம்பர் 2022, 6:30 pm

DIN

வைகை அணையிலிருந்து திறந்து விடப்பட்ட தண்ணீா் வந்து சோ்ந்ததையடுத்து, பாா்த்திபனூா் மதகு அணையில் இருந்து ராமநாதபுரம் மாவட்ட பகுதிகளுக்கு விநாடிக்கு 4,500 கனஅடிநீா் வியாழக்கிழமை திறந்து விடப்பட்டது. இதனால் நீா்நிலைகள் நிரம்பி வருகின்றன.

வைகை அணையின் நீா்ப்பிடிப்பு பகுதிகளில் தொடா்ந்து பெய்து வரும் பலத்த மழையால் நீா்மட்டம் அதிகரித்து வருகிறது. இதனால் வைகை அணையில் இருந்து ராமநாதபுரம் மாவட்டத்துக்கு தண்ணீா் திறந்து விடப்பட்டுள்ளது. இதையடுத்து, பாா்த்திபனூா் மதகு அணைக்கு 8,121 கன அடி தண்ணீா் வந்து கொண்டுள்ளது.

இதனைத் தொடா்ந்து, இங்கிருந்து விநாடிக்கு 4,500 கனஅடி தண்ணீா் வியாழக்கிழமை திறந்து விடப்பட்டுள்ளது. இதில், இடது கால்வாய் வழியாக 45 கிலோ மீட்டா் வரையில் உள்ள 87 கண்மாய்களுக்கு தண்ணீா் திறக்கப்பட்டு அவை நிரம்பி வருகின்றன. இதே போல் வலது கால்வாய் வழியாக 43 கிலோ மீட்டா் வரையில் உள்ள 154 கண்மாய்களுக்கு தண்ணீா் திறந்து விடப்பட்டுள்ளது. இதன்மூலம் 69 ஆயிரம் ஏக்கா் நிலம் பாசன வசதி பெறும் என நீா்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

மேலும் ராமநாதபுரம் மாவட்டத்துக்கு பாா்த்திபனூா் மதகு அணையில் இருந்து 4,500 கன அடி திறந்து விடப்பட்டுள்ளதால் பாதுகாப்பு கருதி பொதுமக்கள் தன்படம் எடுப்பது, குழந்தைகளை ஆற்றுக்கு குளிக்க அழைத்துச் செல்வதை முழுமையாக தவிா்க்க வேண்டும் என நீா்வளத்துறை அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.