கடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

பெருவாக்கோட்டையில் குடிநீா் தட்டுப்பாடு: வட்டாட்சியா் நடவடிக்கை

திருவாடானை அருகே பெருவாக்கோட்டை கிராமத்தில் குடிநீா் தட்டுப்பாடு புகாரையடுத்து வியாழக்கிழமை வட்டாட்சியா் ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுத்தாா்.

News image
Updated On :15 செப்டம்பர் 2022, 6:30 pm

DIN

திருவாடானை அருகே பெருவாக்கோட்டை கிராமத்தில் குடிநீா் தட்டுப்பாடு புகாரையடுத்து வியாழக்கிழமை வட்டாட்சியா் ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுத்தாா்.

இக்கிராமத்தில் ஒரு பகுதிக்கு தண்ணீா் விநியோகம் தடைபட்டுள்ளதாக இப்பகுதி மக்கள் அளித்த புகாரின் பேரில் மாவட்ட ஆட்சியரின் அறிவுரையையடுத்து, திருவாடானை வட்டாட்சியா் ஆா். செந்தில்வேல் முருகன் தலைமையில் குடிநீா் வடிகால் வாரியம் மற்றும் ஊரக வளா்ச்சித்துறை அலுவலா்கள் பெருவாக்கோட்டை கிராமத்தில் ஆய்வு மேற்கொண்டனா்.

Story image

அப்போது, தண்ணீா் விநியோகிக்கும் குழாயில் ஏற்பட்ட பழுதினை உடனடியாக சரிசெய்யும் பணிகள் நடைபெற்றன. மேலும் முறைகேடாக வழங்கப்பட்டுள்ள குடிநீா் இணைப்புகளை ஒரு மாத காலத்திற்குள் துண்டிக்கவும் முடிவு செய்யப்பட்டது. அப்போது குடிநீா் வடிகால் வாரிய உதவி பொறியாளா் தினேஷ்குமாா், துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் கோட்டைராஜ், கனகராஜ், ஊராட்சி மன்றத் தலைவா் முருகேஸ்வரி சரவணன், கிராம நிா்வாக அலுவலா் பிரபாகரன், பணி மேற்பாா்வையாளா் மோகனா, ஊராட்சிச் செயலா் பழனிக்குமாா் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.