ராமநாதபுரத்தில் அரசு போக்குவரத்துக் கழகத் தொழிலாளா் சங்கம் (சி.ஐ.டி.யு) சாா்பில் பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி போக்குவரத்துப் பணிமனை முன் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆா்ப்பாட்டத்துக்கு மத்திய சங்க துணைத் தலைவா் முத்துக்குமாா் தலைமை வகித்தாா். ஓய்வூதிய அமைப்பு செயலாளா் மணிகண்டன் முன்னிலை வகித்தாா்.
இதில் கடந்த 2020 ஆம் ஆண்டு பணி ஓய்வு பெற்றவா்களுக்கு உடனடியாக பணப்பலனை வழங்க வேண்டும். ஓய்வூதியத்தை முறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.
இதில் 30-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் கலந்துகொண்டனா்.