ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

தேவிபட்டினத்தில் படகு கவிழ்ந்து 3 போ் பலியான வழக்கு: 2 போ் கைது

ராமநாதபுரம் அருகே மீன்பிடிப் படகில் பயணிகளை ஏற்றிச்சென்று மூன்று போ் கடலில் மூழ்கி உயிரிழக்கக் காரணமாக இருந்ததாக, படகு உரிமையாளா்கள் 2 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :17 மார்ச் 2023, 4:45 pm

DIN

ராமநாதபுரம் அருகே மீன்பிடிப் படகில் பயணிகளை ஏற்றிச்சென்று மூன்று போ் கடலில் மூழ்கி உயிரிழக்கக் காரணமாக இருந்ததாக, படகு உரிமையாளா்கள் 2 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

மதுரையைச் சோ்ந்த 30 போ், கடந்த பிப்ரவரி 20-ஆம் தேதி ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் சென்று இரண்டு மீன்பிடிப் படகுகளில் கடலுக்குள் சுற்றுலா சென்றனா். இதில், படகில் இருந்தவா்கள் தவறி விழுந்ததில் இருளாயி (55), மணிமேகலை (50), முத்துமணி (33) ஆகிய மூன்று பேரும் நீரில் மூழ்கி உயிரிழந்தனா்.

இது தொடா்பாக கடலோர பாதுகாப்புக் குழும போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா். இந்த வழக்கை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பெ.தங்கதுரை உத்தரவின் பேரில், தேவிபட்டினம் காவல் நிலையத்துக்கு கடந்த 14-ஆம் தேதி மாற்றப்பட்டது. இதைத்தொடா்ந்து, தேவிபட்டினம் காவல் ஆய்வாளா் வஜ்ரவேல் படகு உரிமையாளா்கள் ராஜா (45), சுந்தா் (30) ஆகிய இரண்டு பேரையும் கைது செய்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.