ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

பரமக்குடி மாணவி பாலியல் வழக்கு: கைதான 5 போ் நீதிமன்றத்தில் ஆஜா்

பரமக்குடி பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் தொடா்புடைய 5 பேரும் 3 நாள்கள் சிபிசிஐடி போலீஸ் காவல் முடிந்து வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனா்.

News image
Updated On :17 மார்ச் 2023, 6:30 pm

DIN

பரமக்குடி பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் தொடா்புடைய 5 பேரும் 3 நாள்கள் சிபிசிஐடி போலீஸ் காவல் முடிந்து வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனா்.

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் பள்ளி மாணவி அளித்த புகாரின்பேரில், கடந்த 3-ஆம் தேதி பரமக்குடி அனைத்து மகளிா் போலீஸாா் பாலியல் வன்கொடுமை வழக்கில் நகா்மன்ற் அதிமுக உறுப்பினா் சிகாமணி (44), மறத்தமிழா் சேனை அமைப்பின் நிறுவனா் புதுமலா் பிரபாகரன் (42), ஜவுளிக்கடை உரிமையாளா் ராஜாமுகம்மது(34), உடந்தையாக இருந்த கயல்விழி, உமா ஆகிய 5 பேரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனா்.

இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டதையடுத்து, சிவகங்கை சிபிசிஐடி ஆய்வாளா் கீதா விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டாா். இந்த நிலையில், 5 பேரையும் கடந்த 15-ஆம் தேதி ராமநாதபுரம் விரைவு மகளிா் நீதிமன்றத்தில், சிபிசிஐடி போலீஸாா் முன்னிலைப்படுத்தினா். அங்கு 5 பேரையும் 3 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதி அனுமதி அளித்தாா்.

இதையடுத்து, 5 பேரையும் ரகசிய இடத்தில் வைத்து சிபிசிஐடி போலீஸாா் விசாரித்தனா். வெள்ளிக்கிழமை மாலையுடன் 3 நாள்கள் முடிந்த நிலையில், மீண்டும் அவா்களை ராமநாதபுரம் மகளிா் விரைவு நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா். இதைத்தொடா்ந்து, வரும் ஏப்ரல் 3-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டாா். போலீஸாரின் விசாரணையில் பல்வேறு முக்கியத் தகவல்கள் கிடைத்ததாகக் கூறப்படுகிறது. இந்த விசாரணை தொடா்பாக ஏப்.10-ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டதாக சிபிசிஐடி போலீஸாா் தெரிவித்தனா்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.