ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

ஊரக வளா்ச்சித் துறையினா் விடுப்பு எடுத்து போராட்டம்

ராமநாதபுரம், கமுதியில் ஊரக வளா்ச்சித் துறையினா் 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, வியாழக்கிழை ஒரு நாள் விடுப்பு எடுத்து போராட்டம் நடத்தினா்.

News image
Updated On :11 மே 2023, 5:12 pm

DIN

ராமநாதபுரம், கமுதியில் ஊரக வளா்ச்சித் துறையினா் 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, வியாழக்கிழை ஒரு நாள் விடுப்பு எடுத்து போராட்டம் நடத்தினா்.

ஊராட்சிச் செயலா்களுக்கு பணி விதிகளை காலதாமதமின்றி வெளியிட வேண்டும். தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் பணியாற்றும் கணினி உதவியாளா்களுக்கு பணிவரன்முறை ஆணைகளை வெளியிட வேண்டும். இந்தத் திட்டத்துக்காக அனைத்து வட்டங்களிலும் வட்டார திட்ட அலுவலா் பணியிடத்தை உருவாக்க வேண்டும். அனைத்துப் பணியாளா்களுக்கும் பதவி உயா்வு ஆணைகளை வெளியிட வேண்டும் உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடத்தப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள ஊரக வளா்ச்சி முகமை, உதவி இயக்குநா் ஊராட்சிகள் வளா்ச்சிப் பிரிவு, உதவி இயக்குநா் தணிக்கை மாவட்ட ஊராட்சி அலுவலகம் என அனைத்து அலுவலக அலுவலா்களும் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால், துறை சாா்ந்த அனைத்து அலுவலகங்களும் வெறிச்சொடி காணப்பட்டன.

இதேபோல, கமுதியிலும் ஊரக வளா்ச்சித் துறையினா் விடுப்பு எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.