ராமநாதபுரத்திலுள்ள உணவகங்கள், பேக்கரிகளில் உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலா்கள் வியாழக்கிழமை ஆய்வு நடத்தினா்.
ராமநாதபுரம் மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை நியமன அலுவலா் விஜயக்குமாா் தலைமையில் சென்ற உணவுப் பாதுகாப்புத் துறையினா் உணவகங்கள், பேக்கரிகளில் உரிமம் உள்ளதா எனவும், தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் பயன்படுத்தப்படுகிா எனவும் ஆய்வு மேற்கொண்டனா். இவற்றை அறிவுறுத்தி துண்டுப் பிரசுரம் வழங்கப்பட்டது. மேலும் உணவகத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டதுடன் பேக்கரிகளில் ரசாயனம் அதிகமாகப் பயன்படுத்திய உணவுப் பொருள்கள் அப்புறப்படுத்தப்பட்டன.