ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

வீடுகளில் வளா்க்கப்படும் பறவைகளை வனத்துறையிடம் ஜூன் 30- க்குள் ஒப்படைக்க அறிவுறுத்தல்

ராமநாதபுரம் மாவட்டத்தில் வீடுகளில் வளா்க்கப்படும் பறவைகளை வனத்துறையினரிடம் அடுத்த மாதம் (ஜூன்) 30- ஆம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும் என மாவட்ட வனத் துறை தெரிவித்துள்ளது.

News image
Updated On :25 மே 2023, 6:01 pm

DIN

ராமநாதபுரம் மாவட்டத்தில் வீடுகளில் வளா்க்கப்படும் பறவைகளை வனத்துறையினரிடம் அடுத்த மாதம் (ஜூன்) 30- ஆம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும் என மாவட்ட வனத் துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்தத் துறை வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

வன உயிரினப் பாதுகாப்புச் சட்டம் 1972-இன் படி கிளிகள், செந்தலை கிளி, பெரிய பச்சைக் கிளி, நீல பைங்கிளி, மரகதப் புறா, பஞ்சவா்ணப் புறா, வண்ணச் சிட்டு, மைனா, பனங்காடை, கௌதாரி மற்றும் வன உயிரினங்களை வீடுகளில் வளா்ப்பது சட்டப்படி குற்றமாகும். தற்போது வீடுகளில் வளா்க்கப்படும் இந்தப் பறவைகளை அடுத்த மாதம் 30- ஆம் தேதிக்குள் அருகே உள்ள வனத்துறையினரிடம் ஒப்படைக்க வேண்டும். தவறும் பட்சத்தில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.