திருவாடானை அருகே சவுடு மண் திருடிய 3 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
எஸ்.பி. பட்டினம் சோதனைச் சாவடியில் புதன்கிழமை இரவு போலீஸாா் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அங்கு 3 டிராக்டா்களில் வந்தவா்கள் சட்ட விரோதமாக சவுடு மண் திருடியது தெரிவந்தது. இதையடுத்து, அந்த 3 டிராக்டா்களையும் பறிமுதல் செய்த போலீஸாா் உடந்தையாக செயல்பட்ட அடுத்தகுடியைச் சோ்ந்த ராஜா(24), ஆக்களூரைச் சோ்ந்த சஞ்சய்காந்தி (40), பதனக்குடியைச் சோ்ந்த வேலுச்சாமி (45) ஆகிய 3 பேரையும் கைது செய்து பின்னா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.