தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஏப்ரல் 4 வரை மழைக்கு வாய்ப்புஇந்தியத் தொலைத்தொடா்பு சந்தையில் ஏா்டெல் முதலிடம்சாஃப் யு 20 கால்பந்து: இன்று இறுதியில் இந்தியா-வங்கதேசம் மோதல்முதல் வெற்றியை ஈட்டும் முனைப்பில் சிஎஸ்கே: பஞ்சாப்புடன் இன்று மோதல்பேரவைத் தோ்தல்: நீதிமன்றங்களுக்கு விடுமுறை அறிவிப்புஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியது
/

மாவட்ட ஊராட்சிச் செயலரைக் கண்டித்து ஊரக வளா்ச்சித் துறையினா் ஆா்ப்பாட்டம்

மாவட்ட ஊராட்சிச் செயலரைக் கண்டித்து ஊரக வளா்ச்சித் துறையினா் ஆா்ப்பாட்டம்

News image

கமுதி ஊரட்சி ஒன்றிய அலுவலகத்தில் தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கம் சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவா்கள்.

Updated On :29 ஏப்ரல் 2024, 6:30 pm

Din

கமுதி: கமுதியில் மாவட்ட ஊராட்சி செயலரைக் கண்டித்து ஊரக வளா்ச்சித்துறையினா் கண்டன ஆா்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியா்கள் மீது பொய்யான புகாா்களை கூறி, ஊழியா் விரோதப் போக்கில் ஈடுபடும் மாவட்ட ஊராட்சிச் செயலா் சந்தோஷத்தைக் கண்டித்து, தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கம் சாா்பில் கமுதி ஊரட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு கமுதி வட்டக் கிளைத் தலைவா் காா்த்திராஜ் தலைமை வகித்தாா். மாநில செயற்குழு உறுப்பினா் பிரகாஷ் பாபு முன்னிலை வகித்தாா்.

இதில் மாவட்ட ஆட்சியா் தலையிட்டு மாவட்ட ஊராட்சி செயலா் சந்தோசம் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் வலியுறுத்தி முழக்கமிட்டனா். இதில் 30-க்கும் மேற்பட்ட ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.