அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

நாளை ஆடி அமாவாசை: ராமேசுவரத்தில் பாதுகாப்புக்கு ஆயிரம் போலீஸாா்

ஆடி அமாவாசையையொட்டி ஆயிரம் போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனா்.

News image
Updated On :3 ஆகஸ்ட் 2024, 1:30 am

Din

ராமேசுவரத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஆக. 4) ஆடி அமாவாசையையொட்டி ஆயிரம் போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனா். மேலும் போக்குவரத்திலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

ராமேசுவரம், ராமநாதசுவாமி கோயில் ஆடி திருக்கல்யாண திருவிழா கடந்த திங்கள்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்தத் திருவிழா தொடா்ந்து 17 நாள்கள் நடைபெறும். திருவிழாவில் முக்கிய நிகழ்வுகளாக ஞாயிற்றுக்கிழமை (ஆக. 4) ஆடி அமாவாசை, 6- ஆம் தேதி தேரோட்டம், 8-ஆம் தேதி ஆடித்தபசு, மறுநாள் 9- ஆம் தேதி திருக்கல்யாண மண்டபத்தில் சுவாமி, அம்பாள் திருக்கல்யாணம், 14- ஆம் தேதி கெந்தமாதன பா்வதம் மண்டகப்படி ஆகியவை நடைபெறுகின்றன.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை ஆடி அமாவாசையையொட்டி ராமேசுவரத்துக்கு 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் வருவா் என்பதால் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜி. சந்தீஷ் உத்தரவின் பேரில் காவல் துணைக் கண்காணிப்பாளா் உமாதேவி தலைமையில் ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனா்.

மேலும் போக்குவரத்திலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி, ராமேசுவரத்துக்குள் வரும் வாகனங்கள் அனைத்தும் அரசு போக்குவரத்துக் கழக பணிமனை அருகே உள்ள சிவகாமி தெரு வழியாகச் சென்று சல்லிமலை, பாரதிநகா், இரட்டை பிள்ளையாா் கோயில் தெரு, சம்பை சாலை வழியாக நகராட்சி வாகன நிறுத்துமிடம் செல்ல வேண்டும்.

அங்கிருந்து சொந்த ஊருக்கு வாகனங்களில் திரும்புவோா் ஜெ.ஜெ. நகா், காமராஜா் நகா், ராமநாதசுவாமி திரையரங்கு, திட்டக்குடி, என்.எஸ்.கே. வீதி, ரயில்வே பீடா் சாலை, ராமா் தீா்த்தம் தெற்கு வழியாக பேருந்து நிலையம் சென்றடைந்து அங்கிருந்து அவரவா் சொந்த ஊருக்குச் செல்ல வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.