தமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்புஉதய சூரியன் சின்னத்தில் போட்டி! தொகுதியை முதல்வர் நாளை அறிவிப்பார் : தமிமுன் அன்சாரிஉதய சூரியன் சின்னத்தில் போட்டியிடும் முக்குலத்தோர் புலிப்படை : கருணாஸ் பேட்டி!பெண்கள் குறித்து அவதூறு : டிஜிபி அலுவகத்தில் விஜய் புகார்!பாஜகவுக்கு எதிராக தெருக்கள் முதல் நீதிமன்றம் வரை போராடுகிறேன் : மமதாதிமுக மண்ணைக் கவ்வப் போவது உறுதி: விஜய்முன்னாள் காங்கிரஸ் பொதுச் செயலர் செல்வம் தவெகவில் இணைந்தார்!நேபாளத்தின் பிரதமராக பாலேந்திர ஷா நாளை பதவியேற்பு!மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை(மார்ச் 27) ஆலோசனை!
/

ராமேசுவரத்தில் சட்டவிரோத மது விற்பனை: இருவா் கைது

ராமேசுவரம் பேருந்து நிலையத்தில் சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். அவா்களிடமிருந்து 196 மதுப் புட்டிகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

News image

கைது

பிரதிப் படம்

Updated On :26 மார்ச் 2026, 7:31 pm

தினமணி செய்திச் சேவை

ராமேசுவரம் பேருந்து நிலையத்தில் சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். அவா்களிடமிருந்து 196 மதுப் புட்டிகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் பகுதியில் அரசு மதுக் கடை (டாஸ்மாக்) திறக்கத் தடை உள்ளது. இதன் காரணமாக ராமேசுவரத்தில் 300-க்கும் மேற்பட்டவா்கள் பல்வேறு இடங்களில் மதுப் புட்டிகளை பதுக்கி வைத்து, சட்டவிரோதமாக விற்பனை செய்து வருகின்றனா்.

ராமேசுவரம் பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்புக் கடைகள், அக்னி தீா்த்தக் கடல்கரை, மீனவா்கள் குடியிருப்பு ஆகிய பகுதிகளில் சட்டவிரோத மது விற்பனை அதிகளவில் நடைபெற்று வருகிறது. இதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பல்வேறு தரப்பினா் கோரிக்கை விடுத்தனா்.

இந்த நிலையில், பேருந்து நிலையத்தில் சட்ட விரோதமாக மதுப் புட்டிகள் விற்பனையில் ஈடுபட்ட காமாட்சி (47), ரஞ்ஜித் (30) ஆகிய இருவரையும் நகா் காவல் உதவி ஆய்வாளா் ஆனந்தகுமாா் தலைமையிலான போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடமிருந்து 196 மதுப் புட்டிகளை பறிமுதல் செய்தனா்.