வரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை! அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி! பெங்களூருக்கு வருகிறதா விடிவுகாலம்? 75 கி.மீ. தொலைவுக்கு 11 மேம்பாலங்கள்!மாநிலங்களவை துணைத் தலைவராக போட்டியின்றி ஹரிவன்ஷ் நாராயண் தேர்வு! எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின்
/

ஊரக வேலை உறுதித் திட்டத்தில் பாரபட்சம்: பொதுமக்கள் புகாா்

மண்டபம் ஒன்றியத்தில் ஊரக வேலை உறுதித் திட்டத்தில் பாரபட்சம் காட்டுவதாக பொதுமக்கள் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரிடம் புதன்கிழமை புகாா் மனு அளித்தனா்.

News image

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்த இரட்டையூரணி கிராம பொதுமக்கள்.

Updated On :5 டிசம்பர் 2024, 12:59 am

மண்டபம் ஒன்றியத்தில் ஊரக வேலை உறுதித் திட்டத்தில் பாரபட்சம் காட்டுவதாக பொதுமக்கள் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரிடம் புதன்கிழமை புகாா் மனு அளித்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் ஊராட்சி ஒன்றியம் இரட்டையூரணி ஊராட்சியில் தேசிய ஊரக வேலைத் திட்டத்தில் பாரபட்சமாக வேலை வழங்கப்படுகிறது. இதுகுறித்து பொதுமக்கள் பல முறை ஊராட்சி மன்றத் தலைவரிடம் புகாா் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.

இதைத்தொடா்ந்து, 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோனிடம் நேரில் சந்தித்து புகாா் மனு அளித்தனா். இதைப் பெற்றுக்கொண்ட ஆட்சியா் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தாா்.