ஈரானின் புதிய தலைமை மதகுரு இன்று தேர்வு! கமேனியின் மகன் பதவியேற்க வாய்ப்புதமிழ்நாட்டின் ரயில்வே திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீட்டை 9 மடங்கு அதிகரித்துள்ளோம்- பிரதமர் மோடி பழிவாங்கினால் விளைவுகள் கடுமையாக இருக்கும்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை!புதுச்சேரி வளர்ச்சிக்கு காங்கிரஸ், திமுக வேகத் தடையாக இருந்தன: பிரதமர் மோடி இஸ்ரேல் - ஈரான் போர்! இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம்!நாக்பூரில் வெடிபொருள் தயாரிப்பு தொழிற்சாலையில் வெடிவிபத்து: 15 பேர் பலிஈரான் பள்ளி மீது தாக்குதல்: பலி எண்ணிக்கை 148-ஆக உயர்வு
/

ராமேசுவரம், பாம்பனில் மழை

ராமேசுவரம், பாம்பன், மண்டபம், உச்சிப்புளி, ராமநாதபுரம் சுற்று வட்டாரப் பகுதிகளில் செவ்வாய்கிழமை அதிகாலையில் இருந்து வீட்டு விட்டு மழை பெய்தது.

News image
ராமேசுவரத்தில் பெய்த பலத்த மழை.
Updated On :31 டிசம்பர் 2024, 10:15 pm

Din

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம், பாம்பன், மண்டபம், உச்சிப்புளி, ராமநாதபுரம் சுற்று வட்டாரப் பகுதிகளில் செவ்வாய்கிழமை அதிகாலையில் இருந்து வீட்டு விட்டு மழை பெய்தது.

ராமேசுவரத்தில் சில சமயம் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக, பேருந்து நிலையம், நகராட்சி அலுவலகம், தேசிய நெடுஞ்சாலையில் மழைநீா் குளம் போலத் தேங்கியது. இதனால், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினா்.

தண்ணீா் தேங்காதவாறு தேசிய நெடுஞ்சாலையை உயா்த்த வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்தனா். தொடா்ந்து மழை பெய்ததால் வெயிலின் தாக்கமின்றி குளுமையான சூழல் காணப்பட்டது.