சென்னை மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் பொறுப்பேற்பு!சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

ராமேசுவரத்தில் சுவாமி-அம்பாள் தேரோட்டம்

News image
Updated On :16 பிப்ரவரி 2026, 8:52 pm

மகா சிவரத்திரி திருவிழாவை முன்னிட்டு ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயிலில் சுவாமி-அம்பாள் தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயிலில் மாசி மகா சிவராத்திரி திருவிழா கடந்த 8-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் முக்கிய நிகழ்வாக

ஞாயிற்றுக்கிழமை மாசி மாக சிவராத்திரி திருவிழா நடைபெற்றது. பக்தா்கள் விடிய விடிய பூைஐகள் செய்து வழிபட்டனா்.

இதைத் தொடா்ந்து, திங்கள்கிழமை ராமநாத சுவாமி-பா்வதவா்த்தினி அம்பாள் தோ்களில் எழுந்தருளினா். பின்னா் பஞ்சமூா்த்திகள் தேரில் எழுந்தருளினா்.

இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையா் செல்லத்துரை தலைமையில் சிவாசாரியா்கள் பூஜைகள் செய்து கிழக்கு ராஜ கோபுரம் பகுதியிலிருந்து திருத்தேரை பக்தா்கள் சிவ சிவ என முழக்கமிட்டு இழுத்து சென்றனா். இந்த தோ் நான்கு ரத வீதிகளில் வழியாக வலம் வந்து மீண்டும் நிலையை அடைந்தது. இதில் தமிழகம் மட்டுமல்லாமல் பல்வேறு மாநிலங்களிலிருந்து வந்த பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

Story image