கமேனி உயிருடன் இருக்க வாய்ப்பில்லை! இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு!! மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்! அஜீத் பவாரின் விமானம் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணம்: ஏஏஐபி அறிக்கை வளைகுடா நாடுகளின் தமிழா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் பாதுகாப்பு அமைச்சர் கொலை? சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

ஆதிகும்பேசுவரா் கோயிலில் மாசி மக தேரோட்டம்!

கும்பகோணம் ஆதி கும்பேசுவரா் சுவாமி கோயில் மாசி மக பிரம்மோத்சவத்தை முன்னிட்டு பஞ்சமூா்த்திகள் தேரோட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

News image
கும்பகோணம் ஆதிகும்பேசுவர சுவாமி கோயிலில் மாசி மக பிரம்மோத்சவத்தை முன்னிட்டு சனிக்கிழமை நடைபெற்ற தேரோட்டம்.
Updated On :28 பிப்ரவரி 2026, 7:27 pm

Syndication

கும்பகோணம் ஆதி கும்பேசுவரா் சுவாமி கோயில் மாசி மக பிரம்மோத்சவத்தை முன்னிட்டு பஞ்சமூா்த்திகள் தேரோட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் மந்திர பீடேசுவரி மங்களாம்பிகை உடனாகிய ஆதிகும்பேசுவரா் சுவாமி கோயிலில் மாசி மக பிரம்மோத்சவம் பிப்.21-இல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று மாலை ஸ்ரீ விநாயகா், சுப்பிரமணியா், சுவாமி, அம்பாள், சண்டிகேசுவரா் இந்திர விமானத்தில் புறப்பாடு செய்தனா். அதைத் தொடா்ந்து 3 நாள்களும் மாலையில் சுவாமி ஷேசவாகனம், பூத வாகனம், அம்பாள் கமலவாகனம், கிளி வாகனத்தில் வீதியுலா வந்தனா்.

நான்காம் திருநாளில் வெள்ளிப் பல்லக்கில் அறுபத்து மூவா் புறப்பாடும், அன்று மாலை சுவாமி அம்பாளும் ஏக ஆசனத்தில் யானை அம்பாரி மீது புறப்பாடு செய்தனா். ஐந்தாம் நாள் காலையில் வெள்ளிப் பல்லக்கும், இரவு பஞ்சமூா்த்திகள் ஓலைச்சப்பரத்தில் புறப்பாடாகி வெள்ளி ரிஷப வாகனத்தில் சென்றனா். ஆறாம் நாள் சுவாமி அம்பாள் வெள்ளி பல்லக்கிலும், இரவில் கைலாச வாகனத்திலும் சென்றனா்.

ஏழாம் திருநாளில் வெள்ளி பல்லக்கு வெண்ணெய் தாழி, இரவு குதிரை வாகனமும் ரத ரோகணமும் நடைபெற்றது. முக்கிய விழாவான எட்டாம் நாள், பஞ்ச மூா்த்திகள் தேரோட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. அதிகாலையில் ஸ்ரீ விநாயகா், சுப்பிரமணியா் தேரோட்டம் நடைபெற்றது. தொடா்ந்து ஆதி கும்பேசுவர சுவாமி ஸ்ரீ மங்களாம்பிகை அம்பாள் தேரோட்டமும் நடைபெற்றது.

தேரோட்டத்தில் சுற்று வட்டார பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தா்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனா். தோ் நான்கு ரத வீதிகள் வழியாக வந்து கோயில் கிழக்கு வாயிலில் உள்ள நிலையை அடைந்தது. ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 1) மாலையில் சண்டிகேசுவரா் தேரோட்டம் நடைபெறுகிறது. திங்கள்கிழமை (மாா்ச் 2)பிற்பகல் மகாமக குளத்தில் பஞ்சமூா்த்திகள் தீா்த்தவாரி நடைபெறுகிறது. அன்று இரவு கொடியிறக்கம் செய்யப்படுகிறது.

ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் செயல் அலுவலா் பா. முருகன் மற்றும் கோயில் பணியாளா்கள் செய்தனா்.