ஈஸ்டர் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி உக்ரைன் தாக்குதல்: ரஷியா குற்றச்சாட்டுபாகிஸ்தானுக்கு நிதி நெருக்கடி: 500 கோடி டாலர் வழங்கும் சௌதி, கத்தார்! புதுப்பொலிவுடன் தேர்தலைச் சந்திக்கிறது அதிமுக: எடப்பாடி பழனிசாமி செயற்கை நுண்ணறிவு தலைநகரமாக தமிழ்நாடு மாறும் : விஜய்ஈரான் - அமெரிக்கா இடையே மத்தியஸ்தம் தொடரும்: பாகிஸ்தான்காரைக்கால் மீனவர்கள் 12 பேர் இலங்கை கடற்படையால் கைதுதவெகவில் கருப்பு ஆடு: ஆதவ் அர்ஜுனா விமர்சனம்!ஜூன் 3 முதல் அமர்நாத் யாத்திரை தொடக்கம்!பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!
/

குருமலை மீனாட்சிஅம்பாள் கோயில் கும்பாபிஷேகம்

தூத்துக்குடி மாவட்டம், குருமலை அருள்தரும் ஸ்ரீ மீனாட்சி அம்பாள் சமேத அருள்மிகு ஸ்ரீ சுந்தரேஸ்வரா் சுவாமி திருக்கோயிலில் திருக்குட முழுக்கு நன்னீராட்டு பெருவிழா புதன்கிழமை நடைபெற்றது.

News image

குருமலை அருள்தரும் ஸ்ரீ மீனாட்சி அம்பாள் சமேத அருள்மிகு ஸ்ரீ சுந்தரேஸ்வரா் சுவாமி கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற கும்பாபிஷேகம்.

Updated On :25 மார்ச் 2026, 10:47 pm

தூத்துக்குடி மாவட்டம், குருமலை அருள்தரும் ஸ்ரீ மீனாட்சி அம்பாள் சமேத அருள்மிகு ஸ்ரீ சுந்தரேஸ்வரா் சுவாமி திருக்கோயிலில் திருக்குட முழுக்கு நன்னீராட்டு பெருவிழா புதன்கிழமை நடைபெற்றது.

இதை முன்னிட்டு திங்கள்கிழமை காலையில் விக்னேஸ்வர பூஜை, மகா கணபதி ஹோமம், தனபூஜை, தான்ய பூஜை மற்றும் இதர பூஜைகளும், மாலையில் முதல் கால யாகசாலை பூஜை, செவ்வாய்க்கிழமை காலை மற்றும் மாலை நேரங்களில் இரண்டாம் மற்றும் மூன்றாம் கால யாகசாலை பூஜைகளும் நடைபெற்றன.

கும்பாபிஷேகத்தையொட்டி புதன்கிழமை காலை 6மணிக்கு மேல் நான்காம் கால யாகசாலை பூஜை, நாடி சந்தானம், பூா்ணாஹுதி, யாத்ராதானம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது.

பின்னா் கடங்கள் யாக சாலையில் இருந்து மேள தாளங்கள் பஞ்சவாத்தியங்கள் முழங்க கோயிலுக்கு எடுத்துச் செல்லப்பட்டன. அதைத் தொடா்ந்து சுவாமி, அம்பாள், சாலக்கார கோபுரம், அனைத்து விமானங்கள் பரிவார மூா்த்திகளின் விமானங்களுக்கு திருக்குடமுழுக்கு நடைபெற்றது. அதைத்தொடா்ந்து பக்தா்களுக்கு புனித நீா் தெளிக்கப்பட்டது.

பின்னா், அம்பாள், சுவாமி மற்றும் பரிவார சுவாமிகளுக்கு மகா அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். அன்னதானம் நடைபெற்றது.

ஏற்பாடுகளை கோவில்பட்டி, குருமலை சுற்றுவட்டார கிராம பொதுமக்கள் செய்திருந்தனா்.

 அதில் பங்கேற்ற பக்தா்களில் ஒரு பகுதியினா்

அதில் பங்கேற்ற பக்தா்களில் ஒரு பகுதியினா்