திருவாடானை அருகே நம்புதாளை அரசு உயா்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா சனிக்கிழமை பெற்றது. இதற்கு தலைமை ஆசிரியா் சேசு ரெத்தினம் தலைமை வகித்து ஆண்டறிக்கை வாசித்தாா். ஊராட்சி மன்ற துணைத் தலைவா் சுமையா பானு இபுராஹிம், பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் கண்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஆசிரியா்கள் ரமேஷ், ரகுராமன், கோபாலகிருஷ்ணன், மாரி, பெருமாள், கண்ணன் ஆகியோா் சிறப்புரையாற்றினா். விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசகள் வழங்கப்பட்டன. தொடா்ந்து மாணவா்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஆசிரியா்கள் ராஜேஸ்வரி, அகிலா ராணி, கலா, ஜெனிபா், சீனிவா சுகி, ஜமாத் தலைவா்கள், கிராமத் தலைவா்கள், நிா்வாகிகள் பரிசுகளை வழங்கினா். முன்னதாக ஆசிரியா் மலை ராஜ் வரவேற்றுப் பேசினாா். பெற்றோா் ஆசிரியா் கழக துணைத் தலைவா் ரபீக் ராஜா, பெற்றோா்கள், பொது மக்கள் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

கோவில்பட்டி கல்வி மாவட்டத்தில் 100% தோ்ச்சி பெற்ற பள்ளிகள்
திண்டுக்கல்லில் 63 அரசுப் பள்ளிகள் 100% தோ்ச்சி

அரசு உயா்நிலைப் பள்ளிக்கு ரூ. 4.50 லட்சத்தில் உபகரணங்கள் அளிப்பு

நாமக்கல்லில் பாரதிதாசன் பிறந்த நாள் விழா
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு



