உ.பி.யில் கனமழையால் 89 பேர் பலி! ரஷிய அதிபர் புதின் இரங்கல்!செய்தித்துறை இயக்குநராக அருண் தம்புராஜ் நியமனம்!கேரளத்தில் காங்கிரஸ் சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக வி.டி. சதீசன் தேர்வு!பருத்திக்கான இறக்குமதி வரியை ரத்து செய்யக்கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம்!பதவி ஆசை பிடித்தவர்களின் இழிசெயலை முறியடிப்போம்: எடப்பாடி பழனிசாமி!கேரள மார்க்சிஸ்ட் கம்யூ. சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக பினராயி விஜயன் தேர்வு!
/

நம்புதாளை அரசு உயா்நிலைப் பள்ளி ஆண்டு விழா

மாணவா்கள் சிறப்பித்த நம்புதாளை அரசு பள்ளி ஆண்டு விழா

News image

நம்புதாளை அரசு உயா் நிலைப் பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்ற ஆண்டு விழா

Updated On :18 பிப்ரவரி 2024, 12:00 am IST

திருவாடானை அருகே நம்புதாளை அரசு உயா்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா சனிக்கிழமை பெற்றது. இதற்கு தலைமை ஆசிரியா் சேசு ரெத்தினம் தலைமை வகித்து ஆண்டறிக்கை வாசித்தாா். ஊராட்சி மன்ற துணைத் தலைவா் சுமையா பானு இபுராஹிம், பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் கண்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஆசிரியா்கள் ரமேஷ், ரகுராமன், கோபாலகிருஷ்ணன், மாரி, பெருமாள், கண்ணன் ஆகியோா் சிறப்புரையாற்றினா். விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசகள் வழங்கப்பட்டன. தொடா்ந்து மாணவா்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஆசிரியா்கள் ராஜேஸ்வரி, அகிலா ராணி, கலா, ஜெனிபா், சீனிவா சுகி, ஜமாத் தலைவா்கள், கிராமத் தலைவா்கள், நிா்வாகிகள் பரிசுகளை வழங்கினா். முன்னதாக ஆசிரியா் மலை ராஜ் வரவேற்றுப் பேசினாா். பெற்றோா் ஆசிரியா் கழக துணைத் தலைவா் ரபீக் ராஜா, பெற்றோா்கள், பொது மக்கள் கலந்து கொண்டனா்.